search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் பெண் மந்திரி"

    சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார். #Muzaffarpur #BiharMinister #ManjuVerma #Surrender
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

    இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா, அவரது கணவர் சந்திர சேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Muzaffarpurshelterhome #Manjuvarma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர் பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.



    அதைதொடர்ந்து நடந்த விசாரணையில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. அவருக்கு பீகார் சமூக நலத்துறை மஞ்சு வர்மாவும், அவரது கணவர் சந்திரசேகரும் அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் மஞ்சுவர்மாவின் கணவர் சந்திரசேகருடன் பிரஜேஷ் தாக்கூர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 17 தடவை டெலிபோனில் பேசியதும் உறுதி செய்யப்பட்டது. எனவே மஞ்சுவர்மா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து சி.பி.ஐ. தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

    இந்தநிலையில் பாட்னாவில் உள்ள மஞ்சுவர்மா, பெகுசாரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ள அவரது மருமகன் அர்ஜூன் தோலாவுக்கு சொந்தமான வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மருமகன் அர்ஜூன் தோலா வீட்டில் இருந்து 50 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல்வேறு துப்பாக்கிகளுடன் தொடர்புடையவை. இந்த தகவலை செரிய பரியாபூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ரஜாக் தெரிவித்தார். ஆனால் அவரது மருமகன் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் பெண் மந்திரி மஞ்சுவர்மா, அவரது கணவர் சந்திரசேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மற்றொரு முன்னாள் சமூகநலத்துறை மந்திரி தாமோதர் ரவாத்திடமும் சி.பி.ஐ. போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். இவருக்கும் கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி பிரஜேஷ் தாக்கூருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அதைதொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாமோதர் ரவாத்தின் மகன் ராஜிவ் ரவாத் நீக்கப்பட்டார்.  #Muzaffarpurshelterhome #Manjuvarma


    ×